மாநகராட்சி தெற்கு பகுதியில் ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழக முதலமைச்சரின் வளர்ச்சித் திட்டப் பணிகளின் திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட 88, 89, 90, 91, 92, 93 ஆகிய வார்டு பகுதிகளில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரூ.1.44 கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி 93 வது வார்டில் சக்தி நகர் பகுதியில் ரூ.31.50 லட்சம் மதிப்பில் பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டுத் திடல் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையினையும், 88-வது வார்டுக்கு உட்பட்ட சுண்டக்காமுத்தூர் பிரதான சாலை மற்றும் பழனி ஆண்டவர் கோவில் வீதியில் ரூ.42.50 லட்சம் மதிப்பிலான வடிகால் கட்டும் பணியையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, கோனியம்மன் கோவில் வீதியில் ரூ.31.50 லட்சம் மதிப்பில் வடிகால் கட்டும் பணியையும், 89வது வார்டு இராமசெட்டிபாளையம் பகுதியில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையினையும் துவக்கி வைத்தார்.



இதைத்தொடர்ந்து, 90-வது வார்டுக்கு உட்பட்ட கோவைப்புதூர் என்.பிளாக் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டுத் திடலை திறந்து வைத்தார். பின், அதேப் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தினை பார்வையிட்டு உணவு பரிமாறினார்.



பின், 91-வது வார்டு குளத்துப்பாளையம் பள்ளி அருகில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பயணியர் நிழற்கூடை  அமைக்கும் பணியினையும், மகாலட்சுமி நகர் குமரன் ஹால் அருகில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பயணியர் நிலற்குடை பணியினையும் துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, 92-வது வார்டு சக்தி விநாயகர் கோவில் பகுதியில் 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான அங்கன்வாடி கட்டிட மையத்தை துவக்கி வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்வின் போது, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் ப.காந்திமதி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...