ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரிப்பில் உள்ள கோவை மாநகராட்சி ஆதரவற்றோர் முதியோர் காப்பகத்தில் அன்பு கூடல் நிகழ்ச்சி

ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரிப்பில் உள்ள கோவை மாநகராட்சி ஆதரவற்றோர் முதியோர் காப்பகத்தில் அன்பு கூடல் நிகழ்ச்சி என்னும் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்டம் சூலூரில் அமைந்துள்ள மைக்கேல் ஜாப் பள்ளியைச் சேர்ந்த 60 ஆதரவற்ற குழந்தைகள் முதியோர் காப்பகத்திற்கு வந்திருந்தனர், இப்பள்ளியில் உள்ள குழந்தைகள் யாவரும் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களை சேர்ந்த ஆதரவற்ற குழந்தைகள் ஆவார்கள் .



பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள் மற்றும் பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகள் என அன்பு கூடல் நிகழ்வு அனைவரது இதயத்திலும் பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தியது.













மணிப்பூர், சிம்லா, குஜராத் சேர்ந்த குழந்தைகள் அவர்களது பாரம்பரிய பாடல்கள் பாடி முதியோர்களை மகிழ்விக்க, ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பாக தமிழ் நாட்டு பாரம்பரியமான சிலம்பாட்டம் மற்றும் ஆடல் பாடல்கள், மேஜிக் நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகள்  நடைபெற்றது.



நிறைவாக, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஜெயாமாகேஷ் முதியவர்களும், குழந்தைகளும் மனதார அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர். 

காப்பகத்திற்கு பலதரப்பட்ட மக்கள் வருவது இயல்பு, பல நிகழ்சிகள் அரங்கேற்றம் ஆவதும் இயல்பு. ஆனால் ஆதரவற்ற குழந்தைகள், ஆதரவற்ற முதியோர் காப்பகத்திற்கு வந்து அங்குள்ள முதியோர்களை மகிழ்விக்கும் பொழுது மனதில் ஒரு இனம் புரியாத ஒரு தெளிவும் ஆறுதலும், மனதில் நிறைவும் ஏற்படுத்துகிறது. அது மட்டும் அல்லாது யாரும் ஆதரவற்றவர்கள் இல்லை, ஆதரவுற்றோர் தான் என்பதும் வெளிப்படுத்துகிறது.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...