10 நாட்களுக்கு பின் வங்கிகளுக்கு இன்று விடுமுறை

ரூபாய் நோட்டுக்களை மாற்றித் தரும் பணியில் ஈடுபட்டு வரும் வங்கி ஊழியர்களுக்கு 10 நாட்களுக்கு பிறகு இன்று (நவம்பர் 20) ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக கடந்த 8ம் தேதி அறிவித்த பிரதமர் மோடி, மக்கள் தங்களிடம் இருக்கும் பழைய நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என தெரிவித்தார். வங்கிகளில் இருந்த அந்த நோட்டுகளை திரும்ப பெற்றுக்கொண்டு செல்லத்தக்க நோட்டுகளை இருப்பில் வைப்பதற்காக 9-ந்தேதி விடுமுறை விடப்பட்டது. பின்னர் 10-ந்தேதி முதல் வங்கிகள் செயல்பட தொடங்கியதும் மக்கள் பழைய நோட்டுகளை மாற்றுவதற்காகவும், டெபாசிட் செய்வதற்காகவும் அனைத்து வங்கிகளிலும் குவிந்தனர். இதனால் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட வங்கிகள் செயல்பட்டன.

இவ்வாறு ஓய்வின்றி உழைத்து வந்த வங்கி ஊழியர்களுக்கு ஓய்வு அளிப்பதற்காக இன்று ஒரு நாள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்த தகவலை பெரும்பாலான வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவித்து வருகின்றன.

Newsletter

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...