மாணவர்கள் உயர்ந்த சிகரங்களை அடைந்து சாதனைபுரிய வேண்டும் ஆட்சித்தலைவர் அறிவுரை!

கோயம்புத்தூர் பி.எஸ.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் அரசு விடுதியில் தங்கி பயின்று வரும் பொதுத்தேர்வு  எழுதவுள்ள மாணவ மாணவியர்களுக்கான வழிகாட்டி முகாம் இன்று (19.11.2016) தமிழ்நாடு கதர்வாரிய தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் சந்தோஷ்பாபு முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் இந்நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளையும், வழிகாட்டி புத்தகங்களையும் வழங்கினார்.



பின்னர் பேசிய அவர்; 
தமிழக முதலமைச்சர் பள்ளி மாணவ மாணவியர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார்கள். இதன்மூலம், தமிழகத்தில் கல்விப்புரட்சி ஏற்பட்டுள்ளது. மேலும் அரசு விடுதிகளில் தங்கி பயிலும் மாணவி மாணவியர்களின் கல்வியை மேம்படுத்தி உயர்நத சிகரங்களை அடைகின்ற உதவுகின்ற நிகழ்ச்சிதான் இந்த சிகரம் தொடு நிகழ்ச்சி. தேர்வை கொண்டு மாணவர்களுக்குள்ள பய உணர்வை நீக்கி, தன்னம்பிக்கையை வளர்க்க இந்நிகழ்ச்சி உதவுகிறது . இந்நிகழ்ச்சியில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களாகிய நீங்கள் தேர்வினை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், உயர்ந்த பதவிகளான இந்திய குடிமைப்பணிகளுக்கு எப்படி இப்போதிலிருந்து எவ்வாறு தயார் செய்வது, தேர்வுகாலங்களில் பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்தும் இங்கே நம்மிடையே இருக்கும் சாதனையாளர்களால் உங்களுக்கு தெளிவாக விளக்கப்படவுள்ளது. 

மேலும் மாணவர்களாகிய நீங்கள் வாழக்கையில் உயர்ந்த லட்சியங்களை அடைய சந்தர்பத்திற்காக காத்திராமல், உங்களுக்கான லட்சியங்களை நீங்களே வகுத்து சந்தர்ப்பங்களை உருவாக்கி கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாணவனும் தனக்குள் இருக்கும் திறமைகளை வளர்த்திக் கொண்டாலே போதும் சாதனைகளை நிகழ்த்தி விடலாம். இன்றைய மாணவர்களே நளைய உலகை ஆளப்போகிறவர்கள். தினமும் என்ன படிக்க வேண்டும் என்று நிர்ணயித்து கொண்டு காலத்தை வீணாக்காமல் அனுதினமும் படித்தாலே போதும் அதிக மதிப்பெண்கள் பெற்று விடலாம். இதனை ஊக்குவிக்கும் பொருட்டு அரசின் சார்பில் பல்வேறு கல்வி ஊக்கத் தொகைகளும், விலையில்லா லேப்டாப் களும், வழிகாட்டி புத்தக்கங்கள், பள்ளிச் சீருடைகள்  வினாவங்கிகள், மிதிவண்டிகள் இன்னும் எண்ணற்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 



பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெரும் மாணவ மாணவியர்களுக்கென உண்டு உறைவிடப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இத்திட்டங்கள் அனைத்தும் சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மாணவ மாணவியர்கள் கல்வியில் முன்னேற்றமடைந்து சிறந்த நிலைக்கு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் வழங்கப்பட்டு வருகின்றது. மாணவர்கள் அனைவரும் இதுபோன்ற திட்டங்களையும், இந்த வாய்ப்பினை  பயன்படுத்தி பொதுத்தேர்வில் அதிகளவு மதிப்பெண்களை பெற்று  திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனப்பேசினார்.

தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் கடந்த பொதுத்தேர்வில்  சாதனைபடைத்த மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளும், உயர்கல்வி தெளிவு விளக்க புத்தகங்கங்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக துணைவேந்தர் ராமசாமி, வருமான வரித்துறை இணை ஆணையர் நந்தகுமார், அண்ணா பல்கலைகழக முதல்வர் சரவணக்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.டி.பிரியங்கா, சந்தோஷ் பல்கலைகழக பேராசிரியர் ஷர்மிளாஆனந்த், அரசுக் கலைக்கல்லூரி பேராசிரியர் கனகராஜ், மற்றும்  விடுதி மாணவ மாணவியர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...