உலக கழிப்பறை தின விழிப்புணர்வு பேரணி

ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு உலக கழிப்பறை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உலக கழிப்பறை தினம் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "யூ அண்ட் ஐ" என்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து இன்று இப்பேரணியை நடத்தியது. இப்பேரணியில், கல்லூரி மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கழிப்பறை பற்றிய விழிப்புணர்வு பதாகையை ஏந்தியவாறு சென்றனர்.



இது குறித்து கோவை 'யூ அண்ட் ஐ' நிறுவனத்தின் தலைவர் சோனி அகுஜா பேசுகையில்:- நவம்பர் 19-ம் தேதி உலக கழிப்பறை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் வரும் 2019-ம் ஆண்டுக்குள் திறந்தவெளியில் மலம் கழிக்கப்படாத இந்தியாவை உருவாக்க வேண்டும் எனவும் தூய்மை இந்தியா இயக்கம் தெரிவித்துள்ளது. இதனை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'ஹாப்பி பீட்' என்ற விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.



இதில் திறந்த வெளி கழிப்பறை முற்றிலுமாக தடுப்பதற்கும், குடிசை பகுதிகளில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான வகையில் கழிப்பறை வசதி செய்து கொடுப்பது போன்றவற்றையே 'யூ அண்ட் ஐ' நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். இந்நிறுவனம் குறைந்த நபர்களால் தொடங்கப்பட்டு, இன்று இந்தியாவில் 10 நிறுவனங்கள் உள்ளதாக அவர் கூறினார்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...