கிட்னி தானமளிக்க மத வேறுபாடின்றி முன்வரும் நல்ல உள்ளங்கள்.. சுஷ்மா உருக்கம்

டெல்லி: இஸ்லாமியர்கள் பலர் கிட்னி தானம் செய்ய முன்வந்துள்ளதை அடுத்து அதற்கு மத முத்திரை எதுவும் இல்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருக்கிறார். சுஷ்மா சுவராஜுக்கு கிட்னி செயல் இழந்துள்ளதால் அதற்கு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான பரிசோதனை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ராஜஸ்தான் இளம் விவசாயி,முஜிப் அன்சாரி என்ற இஸ்லாமிய உள்ளிட்ட ஏராளமானோர் சுஷ்மாவுக்கு கிட்னி தானம் வழங்க முன்வந்துள்ளனர். அதற்கு நன்றி தெரிவித்து அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சகோதரர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி என்று என்று குறிப்பிட்டுள்ள அவர், கிட்னிக்கு மத முத்திரை இல்லை என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக கூறியிருக்கிறார். முன்னதாக முஜிப் அன்சாரி தனது டுவிட்டர் பக்கத்தில் உத்தரப்பிரதேச மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவாளரான தான் சுஷ்மாவுக்கு கிட்னி தானம் வழங்க தயாராக இருப்பதாகவும், அவரை எனது அம்மாவாக கருதி கிட்னி தானம் செய்ய விரும்புவதாகவும் பதிவிட்டிருந்தார். மேலும், சுஷ்மா விரைவில் குணமடைய அல்லா ஆசிர்வதிப்பார் என்றும் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள சுஷ்மா கிட்னிக்கு மத முத்திரை இல்லை என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். நியமத் அலி சேக், ஜான் ஷா உள்ளிட்ட பிற இஸ்லாமிய தோழர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுஷ்மாவுக்கு கிட்னி தானம் வழங்க முன்வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

64 வயதுடைய சுஷ்மா கிட்னி செயல்பாடு இழந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு கிட்னி தானம் வழங்க புதன்கிழமை முதல் ஏராளமானோர் விரும்பம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அனைத்து மக்களின் ஆசிரிவாதத்துடனும் கடவுளின் கிருபைாயலும் விரைவில் குணமாகி தாம் வீடு திரும்புவேன் என்றும் சுஷ்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...