மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிக்களில் உற்சாகத்துடன் பங்கேற்ற மாணவர்கள்

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் சார்பில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுக்கான முதல் சுற்று விளையாட்டுப் போட்டிகள் கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் வெள்ளியன்று (இன்று) துவங்கியது.



இதில், கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளி மாணவர்கள், பார்வை குறைபாடு உள்ளவர்கள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், காது கேளாதோர் என நான்கு பிரிவுகளாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

14 வயதுக்கு உட்பட்ட 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டி, ஸ்டாண்டிங் பிராட் ஜம்ப், டென்னிஸ் பந்து எறிதலும், 17 வயதுக்கு உட்பட்ட 9 மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இதே பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.

மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிபடுத்த ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு பங்கேற்றது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. இப்போட்டிகளைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட போட்டிகள் வரும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது.

இப்போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கபடவுள்ளதாக இடைநிலைக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...