விஜய் மல்லையாவுக்கு கடன் தள்ளுபடி செய்த எஸ்பிஐ வங்கியைப் பாராட்டி சமூக நீதிக்கட்சி நூதன போராட்டம்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் விஜய் மல்லையா பெற்றுள்ள ரூ.1,201 கோடி கடன் தொகை உட்பட 63 பெருங்கோடீஸ்வர பண முதலைகளின் சுமார் ரூ.7,016 கோடியை தள்ளுபடி செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்து மக்களை வஞ்சித்து வரும் இந்நிலையில், பண முதலைகளின் கோடிக்கணக்கான கடனை தள்ளுபடி செய்யும் விவகாரம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயக் கடன், ஏழை மாணவர் கல்விக் கடன் என சாதாரண ஏழை, எளிய மக்கள் பெற்றுள்ள வங்கிக் கடனில் சிறிதும் சலுகையின்றி கடுமையான வசூலில் ஈடுபடும் வங்கிகள், விஜய் மல்லையா உள்ளிட்டோருக்கு வழங்கியுள்ள கடன் தள்ளுபடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே கண்டனப் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் சமூக நீதிக் கட்சியின் சார்பாக ஆயிரக் கணக்கான கோடி ரூபாய்யை ஏமாற்றிய ஏழை விஜய் மல்லையாவின் கடன் தள்ளுபடியைப் பாராட்டி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைமை அலுவலகத்தின் பொது மேலாளரிடம் மலர் கொத்து வழங்கி நூதன முறையில் கண்டனத்தை வெளிப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவிற்கு சென்ற சமூக நீதிக் கட்சியினரை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் அவர்களை கைது செய்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...