கோவை மாநகராட்சியும் அறம் அறக்கட்டளையும் இணைந்து குழந்தைகள் உதவி மைய அலுவலகம் துவக்கம்

கோவை மாநகராட்சியும் அறம் பொதுநல அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் குழந்தைகள் உதவி மையம் மற்றும் ஸ்மார்ட் ஸ்கூல்ஸ் திட்ட மையத்தின் அலுவலக திறப்பு விழா மாநகராட்சி ஆணையர் க.விஜய கார்த்திகேயன் தலைமையில் வியாழனன்று (இன்று) ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.

குழந்தைகள் உதவி மையம்:-

கோவை மாநகராட்சியின் சார்பில் குழந்தைகள் உதவி சேவை எண் 81900 00300 செயல்பட்டு வருகிறது. இதற்கான உதவி மையத்தை அறம் பொதுநல அறக்கட்டளையின் குழு நிர்வகிக்கும். அந்த குழுவில் மனநல மருத்துவர், மனநல ஆலோசகர், சமூக சேவகர்கள் மற்றும் கல்வியாளர்கள் இம்மையத்திற்கு வரும் குழந்தைகளின் பிரச்சனைகளுக்கு ஏற்ப ஆலோசனைகளும் மற்றும் தீர்வுகளை நோக்கிய வழிமுறைகளும் இலவசமாக பரிந்துரைப்பார்கள்.

கோவை மாநகராட்சி பள்ளியில் இந்த மையம் செயல்படுவதால் அப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும்.



ஸ்மார்ட் ஸ்கூல்ஸ் திட்ட மையம்:-

கோவை ஸ்மார்ட் நகரம் ஆவதால் கோவையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்தும் பொருட்டு கோவை மாநகராட்சியும் அறம் பொதுநல அறக்கட்டளையும் இணைந்து கணேசபுரம் மாநகராட்சி ஆரம்ப பள்ளியை மாதிரி பள்ளியாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. 

இப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வசதிகள், நவீன கற்பிக்கும் முறைகள், சிறந்த பள்ளிவளாக கட்டமைப்பு வசதிகள், பசுமை வளாக திட்டங்கள், காய்கறி மற்றும் பூந்தோட்டம், ஆரோக்கியமான உடல் மற்றும் மன வளர்ச்சிக்கான செயல் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இவை அனைத்தும் மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தலின்படி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், அறம் பொதுநல அறக்கட்டளையின் பல்வேறு சமூகநல  பணிகளை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். கோவை மாநகராட்சியும் அறம் பொதுநல அறக்கட்டளையும் இணைந்து நடத்திய ''ஹாப்பி சைல்ட் மற்றும் ஸ்மார்ட் ஸ்கூல்'' வெற்றி படி திட்டங்கள் நாட்டின் சிறந்த 100 திட்டங்களில் skoch award'' பெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...