குஜராத்தில் ரூ.2.5 லட்சம் லஞ்ச தொகை ரூ.2 ஆயிரம் தாள்களாக பிடிபட்டதால் பரபரப்பு, இருவர் கைது

பழைய ரூ.500,1000 தாள்கள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பையடுத்து நாடு முழுவதும் ரூபாய் தாள்களை மாற்ற மக்கள் கடும் சிரமப்பட்டு வரும் நிலையில், குஜராத்தில் உள்ள இரண்டு துறைமுக அதிகாரிகள் ரூ.2.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டனர். ஆனால், இதில் விநோதம் என்னவெனில் லஞ்சப்பணம் அனைத்தும் புதிய ரூ 2 ஆயிரம் தாள்கள் என்பது கவனிக்கத்தக்கது.

நவம்பர் 11 ஆம் தேதி முதல் புதிய ரூ.2 ஆயிரம் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தாள்கள் இன்னும் புழக்கத்தில் போதிய அளவில் வாராததால் மக்கள் கடும் சிரமப்பட்டு வரும் நிலையில், லஞ்சப்பணமாக இவ்வளவு தொகையில் புதிய ரூ 2 ஆயிரம் தாள்கள் கிடைத்தது சோதனையிடச்சென்ற அதிகாரிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

குஜராத்தில் உள்ள கண்டாலா துறைமுகத்தில் அதிகாரிகளாக பணியாற்றி வரும் பி ஸ்ரீவிவாசு மற்றும் கே கோமேட்கர் ஆகியோர் லஞ்சம் பெற்றதாக கைதுக்குள்ளான அதிகாரிகள் ஆவர்.  இவர்கள் 4.4 லட்சம் தொகைக்கான நிலுவை பில் தொகையை மாற்றுவதற்காக தனியார் மின்னனு நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்றுள்ளனர். இதையடுத்து குஜராத் ஊழல் தடுப்பு பிரிவால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீனிவாசுவின் வீட்டில் இருந்து மேலும் ரூ. 40 ஆயிரம் தொகையை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். புதிய ரூபாய் தாள்கள் லஞ்சப்பணமாக கிடைத்தது எப்படி என்பது பற்றி ஊழல் தடுப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...