பணம் வராத ஏடிஎம் மையத்திற்கு மலர் வளையம் வைத்து மாதர் சங்கம் நூதன போராட்டம்

கோவையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் பணம் வராத ஏடிஎம் மையங்களுக்கு மலர் வளையம் வைத்து, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நூதன முறையில் ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது.



மத்திய பாஜக தலைமையிலான மோடி அரசு கடந்த 8 ஆம் தேதி ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய்கள் செல்லாது என திடீரென அறிவித்தது. இதனையடுத்து அனைத்துத் தரப்பு பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

குறிப்பாக, பெண்கள் மளிகை பொருட்களை வாங்க முடியாமலும், அன்றாட வரவு, செலவுகளை செய்ய முடியாமலும் தவித்து வருகின்றனர். மேலும், வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் பணத்தை மாற்ற குவிந்து வருகின்றனர். ஆனால், பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாததால் பெரும் ஏமாற்றத்தை அனுபவித்து வருகின்றனர்.



மத்திய அரசின் இத்தகைய மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து பணம் வராத ஏடிஎம் மையங்களுக்கு மலர் வளையம் வைத்தும், மாலை அணிவித்தும் மாதர் சங்கத்தினர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள பணம் வராத ஏடிஎம் மையத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மாதர் சங்கத்தினர், பருப்பு வாங்க காசில்லை, பால் வாங்க காசில்லாம மத்திய அரசு செய்து விட்டதே என்று ஒன்று கூடி ஒப்பாரி வைத்தனர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் என்.அமிர்தம் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் ராதிகா, பொருளாளர் ஜோதிலட்சுமி, மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி உள்ளிட்ட ஏராளமான மாதர் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மாதர் சங்கத்தினரின் இந்த நூதனப் போராட்டத்தில் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...