தடை செய்யப்பட்ட நோட்டுகள் குறித்து கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!


புழக்கத்தில் உள்ள ரூ. 500, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 31 ஆம்தேதிவரை மக்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக தலைமையிலான மோடி அரசு கடந்த 8 ஆம்தேதி இரவு திடீரென ரூ500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தது. இதனையடுத்து  சிறுகுறு தொழில்கள் மற்றும் வியாபாரம் ஆகியவை முடங்கின. அமைப்பு சார தொழிலாளர்கள் மாதந்திர, வாரந்திர கூலியை பெற முடியாத சூழல் உருவானது. மேலும்  கடந்த ஒரு வார காலமாக அனைத்து வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று சிறிய தொகையை எடுப்பதற்கு பல மணிநேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய மக்கள் விரோத செயல்பாட்டை கண்டித்து நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்  போராட்டங்களை நடத்த அறைகூவல் விடுத்தது.

இதன் ஒருபகுதியாக கோவை பவர்ஹவுஸ் முன்பு சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மோடி அரசு வெளிநாட்டில் பதுக்கியுள்ள பணத்தை பிடிக்க திறன் இல்லாமல், கார்ப்ரேட்டுகளின் நலனுக்காக உழைப்பாளி மக்களின் பணத்தை பிடுங்குவதாகவும் குற்றம் சாட்டி முழக்கங்களை எழுப்பினர். இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் எம்.பி பி.ஆர்.நடராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கருப்பு பணத்தை பிடிக்கிறேன் என்று சொல்லி அனைத்து தரப்பு மக்களின் அன்றாட செலவு பணத்தை பிடுங்கும் மோடி மறுபுறம் விஜய் மல்லையா உள்ளிட்ட கார்ப்ரேட் நிறுவனங்கள் வங்கியில் வாங்கியுள்ள 43 ஆயிரம் கோடி ரூபாயை தற்போது தள்ளுபடி செய்துள்ளது.

இது வன்மையாக கண்டிக்கத்தக்கது மோடியினால் ஒரு போதும் கருப்பு பணத்தை மீட்க முடியாது. மாறாக உழைப்பாளி மக்களின் பணத்தை மட்டும்தான் பறிக்க முடியும் என்று குற்றம் சாட்டினார்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...