'எக்சிட் தேர்வு' வேண்டாம் என்று கூறி அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


மருத்துவ படிப்பு முடித்த மாணவர்களுக்கு எக்சிட் தேர்வு வைக்க இருப்பதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தேர்வு முறையை எதிர்த்து கோவை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் இன்று அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இது குறித்து அக்கல்லூரியின் மாணவர் பிரதிநிதியான விட்மன் அறிவுமதி கூறியதாவது :- 

மத்திய மற்றும் மாநில அரசுகளின் அங்கீகரிக்கப்பட்ட தேர்வுகளை எழுதியே நாங்கள் இந்த படிப்பை படித்து வருகிறோம். ஆனால் தற்போது எக்சிட் தேர்வு முறை வைக்க இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. இந்த முறை அமலுக்கு வந்தால் இந்தியாவில் மருத்துவர்கள் எண்ணிக்கை குறையும். வெளிநாடுகளிலும், தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களிடையேயும் நடத்தப்பட வேண்டிய இந்த தேர்வை, அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களிடையே நடத்துவது ஏற்புடையதல்ல. உடனடியாக இதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் கலந்து கொண்டனர். 



          

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...