வங்கியில் பணத்தை மாற்றினால் விரலில் மை: நெரிசலை தவிர்க்க மத்திய அரசு அதிரடி

வங்கியில் பணம் மாற்ற வருபவர்களில் விரலில் மை வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பெருநகரங்களில் இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இன்று முதல் அமல்:

டில்லியில் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி: வங்கிக்கிளைகள் மற்றும் ஏ.டி.எம்.,களில் கூட்ட நெரிசல் குறித்த ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஒரே நபர்கள் மீண்டும் மீண்டும் வருவது தெரியவந்துள்ளது. வங்கியில் நெரிசலை குறைக்க, தேர்தலின் போது மை வைக்கப்படுவது போல், பணம் வாங்க வருபவர்களுக்கு விரலில் மை வைக்கப்படும். பணம் வழங்கும் கவுன்டரில் பணம் வாங்குவோரின் விரலில் மை வைக்கப்படும். பெருநகரங்களில் இன்று முதல் அமலாகிறது.

சதி:

கறுப்பு பணம் வைத்திருப்போர், ஆட்களை குழுக்களாக அனுப்பி வைத்து வெள்ளையாக மாற்ற முயற்சி செய்கின்றனர். கறுப்பு பணத்தை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக சில விரோத சக்திகள் குழப்பத்தை உருவாக்க முயற்சி செய்கின்றனர். வங்கியில் டெபாசிட் செய்யப்படும் கறுப்பு பணத்தை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. பணம் இருப்பு குறித்து, பிரதமர் மோடி , நிதியமைச்சர் ஜெட்லி ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.

பீதி வேண்டாம்:

பணம் தேவையான அளவு உள்ளதால் மக்கள் பீதியடைய தேவையில்லை. சிறிய மதிப்பு கொண்ட பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய வழிபாட்டு தலங்கள் முன்வர வேண்டும். பொதுத்துறை வங்கிகளில், பணப்பரிமாற்றத்தை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்னணு வாலட் முறைகளை பிரபலப்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏடிஎம்களில் விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு:

அத்தியாவசிய பொருட்கள் எளிதாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் தேவை, சப்ளை, குறித்து அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. தேவையான அளவு உப்பு கையிருப்பு உள்ளது. திடீர் விலையேற்றத்திற்கு காரணம் இல்லை என்றார். 

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...