டிரம்பிடம் சீன அதிபர் வலியுறுத்தல் வலிமையான நல்லுறவுக்கு ஒத்துழைப்பு அவசியம்

 நாடுகளிடையேயான நல்லுறவுக்கு சீனா - அமெரிக்கா இடையே ஒத்துழைப்பு அவசியம் என புதிய அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள  டொனால்ட் டிரம்பிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார். அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இதையடுத்து புதிய அதிபர் டொனால்ட் டிரம்புக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக சீன தொலைக்காட்சி  செய்தி வெளியிட்டுள்ளது.

அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை சீனா பறித்து கொள்வதாக டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார். இந்த  நிலையில் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசிய ஜின்பிங், அமெரிக்க அதிபராக தேர்வு பெற்ற டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்தார்.  அப்போது ஜின்பிங் பேசியதாவது: கடந்த 37 வருடமாக சீனா, அமெரிக்கா இடையே உள்ள ராஜ்ய உறவுமூலம் இரு நாட்டு மக்களும்  ஏராளமான நன்மைகளை பெற்றுள்ளனர். உலகத்தில் சீன வளர்ந்து வரும் நாடாகவும், அமெரிக்கா வல்லரசாகவும் உள்ளது.

எனவே வலிமையான பொருளாதாரத்தை பெற்றுள்ள இருநாடுகளும் உலக அமைதிக்காக இணைந்து பணியாற்றுவது அவசியம். வலிமையான  இரு நாடுகளின்  ஒத்துழைப்பே வலிமையான நல்லுறவுக்கு வழிகாட்டியாக உள்ளது என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே சீனா  தொடர்ந்து அமெரிக்காவின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறது. இவ்வாறு ஜின்பிங் தெரிவித்தார். அப்போது பேசிய டிரம்ப், ‘‘அமெரிக்கா சீனா  இடையேயான உறவு மற்றும் இருநாடுகளுக்கும் கிடைத்த பலன்களை ஒப்புக்கொள்கிறேன். இருநாடுகள் இடையே  வலிமையான உறவு  நீடிக்க விரும்புகிறேன்’’ என்றார்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...