சொத்துவரி செலுத்தாததால் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு - மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை

கோவை மாநகராட்சியில் சொத்துவரி உள்ளிட்டவற்றை கட்டாதவர்கள் மீது நடிவடிக்கை எடுக்க கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார். 

அதனடிப்படையில், கோவை மாவட்ட கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 57-வது வார்டு, மசக்காளிபாளையம் சின்னசாமி வீதியில் வசித்து வரும் சுப்ரமணியம் என்பவர் சொத்துவரி 46 ஆயிரத்து 682 செலுத்தாமல் இருந்துவந்துள்ளார். அவரது வீட்டின் குடிநீர் இணைப்பும், தெற்கு பகுதிக்கு உட்பட்ட போத்தனூர் மணிகண்டன், திருமால்வேந்தன் சொத்து வரி 53 ஆயிரத்து 790 ரூபாய் செலுத்தாததாலும் அவர்களது குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

இதேப்போன்று கோவை வடக்கு பகுதிக்கு உட்பட்ட கணபதி பகுதியில் செயல்படும் யுனிவர்சல் மிஷினரி ஒர்க்ஸ் சொத்து வரி ரூ.8 ஆயிரத்து 386 மற்றும், ரூ.10 ஆயிரத்து 721 செலுத்தாமலும் இருந்து வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, அதன் குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள் கோவை மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தி ஜப்தி நடவடிக்கையினை தவிர்க்குமாறு அவர்தெரிவித்துள்ளார்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...