56 வருட கலை சேவையை பாராட்டி ஜாக்கிசானுக்கு கவுரவ ஆஸ்கர்

 பிரபல நடிகர் ஜாக்கி சானுக்கு அமெரிக்காவில் நடந்த விழாவில் கவரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கைச் சேர்ந்தவர் நடிகர் ஜாக்கி சான். தனது அதிரடி சண்டைக் காட்சிகள் மற்றும் காமெடி முலம் உலகமெங்கும் உள்ள ரசிகர்களை  வசியப்படுத்தியவர். நடிகர், இயக்குனர், சண்டைக் கலைஞர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட ஜாக்கி சானுக்கு தற்போது 62  வயது. தனது ஐந்து வயதில் இருந்தே நடிக்கத் தொடங்கிய அவர், இப்போது 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

உலகம் முழுவதும் இருந்தும் பல்வேறு சினிமா விருதுகளை பெற்றுள்ள அவருக்கு உலகின் உயரிய சினிமா விருதான ஆஸ்கர் விருது  இதுவரை கிடைத்ததில்லை. 56 வருடமாக சினிமா துறையில் இருக்கும் ஜாக்கிசானுக்கு  கவுரவ விருது வழங்க, ஆஸ்கர் கமிட்டி முடிவு  செய்தது. அதன்படி, 8வது கவுரவ ஆஸ்கர் விருது வழங்கும் வண்ணமிகு விழா, அமெரிக்காவின் ஹாலிவுட்டில் நேற்று முன்தினம் இரவு  நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ஜாக்கி சான், எடிட்டர் ஆன் வி கோட்ஸ், காஸ்டிங் டைரக்டர் லின் ஸ்டால் மாஸ்டர் மற்றும்  ஆவணப்பட இயக்குனர் பிரெடரிக் வைஸ்மேன் ஆகியோருக்கு அவர்களின் கலை சேவையை பாராட்டி கவுரவ ஆஸ்கர் விருது  வழங்கப்பட்டது.

விருதை பெற்ற பின்  ஜாக்கிசான் பேசியதாவது: 23 வருடங்களுக்கு முன் சில்வஸ்டர் ஸ்டாலோனை அவரது வீட்டில் சந்தித்தேன். அப்போது  ஆஸ்கர் விருதை அங்கு பார்த்ததில் இருந்து அதை வாங்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. கடைசியாக இப்போது ஆஸ்கர் அகாடமியின்  தலைவர் ஐசாக் அழைத்து விஷயத்தைச் சொன்னார். என்னால் நம்பவே முடியவில்லை. எனது 56 வருட சினிமா வாழ்வில், 200 படங்களுக்கு  மேல் நடித்துவிட்டேன். படங்களுக்காக எனது எலும்புகள் பலவற்றை உடைத்து, கடைசியாக இந்த விருதை பெற்று விட்டேன்.  ஹாலிவுட்டுக்கு நன்றி. பல விஷயங்களை அது எனக்கு கற்றுத் தந்திருக்கிறது. அதோடு என்னை கொஞ்சம் பிரபலமாகவும் உருவாக்கி  இருக்கிறது. இங்கு இப்போது கவுரவிக்கப் பட்டிருக்கிறேன். இவ்வாறு ஜாக்கி சான் கூறினார்.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...