மாடியில் இருந்து தவறி விழுந்து பத்திரிகையாளர் மரணம் சக பத்திரிகையாளர்கள் கருப்பு பேட்ச் அணிந்து துக்கம் அனுசரிப்பு

கோவை பேரூர் பகுதியை சேர்ந்தவர் யாழ்முடி நாதன் என்கிற கவுதம் (27). இவர் லோட்டஸ் மற்றும் மூண் தொலைக்காட்சிகளில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். கடந்த வாரம் தனது சகோதரியின் திருமண நிகழ்ச்சிக்காக கொடைக்கானலுக்கு சென்றார். திருமணம் முடிந்து சகோதரி வீட்டில் தங்கியிருந்தார். நேற்று இரவு, எதிர்பாராத விதமாக வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 



இது குறித்த தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கவுதம்-ன் உடலை கைப்பற்றி கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். 

தற்போது கவுதம்-ன் உடல், அவரது சொந்த ஊரான கோவைக்கு கொண்டுவர உள்ளது.  இது குறித்து தகவலறிந்த கோவை மாவட்ட பத்திரிக்கையாளர்கள் இன்று காலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும், கருப்பு பேட்ச் அணிந்து துக்கம் அனுசரித்துள்ளனர். 



உடன் பணியாற்றிய  பத்திரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம், சக பத்திரிக்கையாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...