உலக சக்கரை நோய் விழிப்புணர்வு பேரணி

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ம் தேதி இன்று உலக சக்கரை நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு சக்கரை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோயமுத்தூர் அரசு மருத்துவமனையில் உலக சக்கரை நோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



இப்பேரணியை கோவை மாவட்ட வருவாய்துறைத் தலைவர் கிருஸ்துராஜ் துவக்கி வைத்தார். அரசு மருத்துவமனை டீன் எட்வின் ஜோ முன்னிலை வகித்தார். இதில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் அதிவிரைவுப் படையினர் கலந்து கொண்டனர். இப்பேரணி அரசு மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று நிறைவு பெற்றது.



இது குறித்து நீரிழிவு துறைத் தலைவர் மருத்துவர் ஜெயப்ரகாஷ் கூறுகையில்:-

பொது மக்களுக்கு சக்கரை நோய் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. இன்றைய காலகட்டத்தில் அனைவரும் சக்கரை நோயை சரிசெய்ய செயற்கை இன்சூலின் மாத்திரை, இன்சூலினை ஊசி வடிவில் எடுத்து கொள்கிறார்கள். தினமும் 400க்கும் மேற்பட்ட சக்கரை நோயாளிகளுக்கு இலவசமாக சிகிக்சை அளிக்கப்படுகிறது.

மேலும் இலவச இன்சூலின் வழங்கப்படுகிறது. நோயாளியின் உடல் அமைப்புக்கு  ஏற்றவாறு இன்சூலின் உற்பத்தியை தூண்டும் உடற்பயிற்சி முறைகள் உள்ளன. இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை எப்போதும் கட்டுபாட்டில் வைக்க முடியும். தினமும் இரண்டு வேளை குறைந்தபட்சம் 30 நிமிட வேக நடைபயிற்சி, ஒருமணி நேர விளையாட்டு, நடந்து செல்வது போன்றவற்றை செய்வதன் மூலம் உடலில் சக்கரை நோய் வராமல் தடுக்கலாம் எனக் கூறினார்.



Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...