பாலித்தீன் பைகளை தவிர்த்து துணிப் பைகளை பயன்படுத்த மாநகராட்சி ஆணையர் ஆலோசனை



கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தலைமையில் கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து ஹோட்டல் உரிமையாளர்களுடன் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக துணிகளால் ஆன பைகளை பயன்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் வியாழனன்று (இன்று) நடைபெற்றது. 



இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில், ''கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் பெருகி வருவதால் சுற்றுசூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. இதை தடுத்திடும் வகையில் இன்று அனைத்து ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் உபயோகத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், பாலித்தீன் பைகள் எளிதில் மக்குவதில்லை, பாலித்தீன் பைகளால் பல்வேறு உடல்நிலைப் பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இதை தடுத்திடும் வகையில் அனைத்து ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக துணிகளால் ஆன பைகளை உபயோகிக்குமாறும், குறிப்பாக ஹோட்டல் உரிமையாளர்கள் தங்களின் வாடிக்கையாளர்கள், பார்சல் வாங்க வரும் பொழுது பாத்திரங்களோ அல்லது துணிகளால் ஆன பைகளை கொண்டுவருமாறும் பொது மக்கள் அறியும் வகையில் அறிவிப்புப்பலகை வைத்திடுமாறும், தவிர்க்க முடியாத பட்சத்தில் ஹோட்டல்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் துணிகளால் ஆன பைகளையே வாடிக்கையாளர்களுக்கு வழங்கிடுமாறு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், பைகளில் 95 சதவிகிதம் பிளாஸ்டிக் கலந்திருப்பதால் மக்கும் தன்மை கிடையாது, ஆகையால் பொது மக்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் இதை பயன்படுத்த வேண்டாம் என க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், துணை ஆணையர் ப.காந்திமதி, நகர் நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், உதவி நகர்நல அலுவலர் எம்.சந்தோஷ்குமார், ஸ்ரீ அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர்கள் சீனிவாசன், விவேக் சீனிவாசன், நியூ ஆரிய பவன் ஹோட்டல் உரிமையாளர் பாலாஜி, சூரியா ஹோட்டல் உரிமையாளர் சுந்தர்ராஜன், சுப்பு மெஸ் உரிமையாளர் செந்தில்குமார், ஸ்ரீ ஆனந்தாஸ் ஹோட்டல் உரிமையாளர் வெங்கடேஷ், ஆர்.ஹெச்.ஆர் ஹோட்டல் உரிமையாளர் சிவக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...