3 நாள் பயணமாக... ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி!

டெல்லி: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த கையோடு பிரதமர் மோடி இன்று ஜப்பான் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பிரதமரின் 3 நாள் ஜப்பான் பயணத்தில் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இருநாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக பிரதமர் மோடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஜப்பானில் 10 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 3 நாட்கள் ஜப்பான் பயணம் மேற்கொள்கிறேன்.

அங்கு இருநாடுகளின் முக்கிய வர்த்தகத் தலைவர்களைச் சந்தித்து தொழில் மற்றும முதலீடு குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன்.

ஜப்பானுடனான இந்தியாவின் உறவு சிறப்பு வாய்ந்த ராஜதந்திரத்துடனும் சர்வதேச கூட்டாண்மையுடனும் உருவாக்கப்பட்டதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்குச் செல்லும் மோடி அங்கு அந்நாட்டு மன்னர் மற்றும் பிரதமரை சந்தித்து பேசுகிறார்.

பின்னர் பிரதமர் அபேவுடன் புகழ்பெற்ற ஷிண்கன்சென் புல்லட் ரயிலில் கோபே நகருக்கு செல்கிறார். மேலும் அதிவேக ரயில்களை உற்பத்தி செய்யும் கவாஸ்கி ராயில் தொழிற்சாலையை அவர் பார்வையிடுகிறார்.

இந்தப் பயணத்தின் போது அணுசக்தி நிறுவனங்கள் இந்தியாவில் தொழிற்சாலைகள் அமைக்கும் வகையில் இருநாடுகளுக்கும் இடையில் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோடி பிரதமராக பதவியேற்றதற்கு பின் இரண்டாவது முறையாக தற்போது ஜப்பான் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...