45வது அதிபர் டிரம்புக்கு மோடி, தலைவர்கள் வாழ்த்து

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி: புதிய அதிபராக வெற்றி பெற்ற டிரம்ப்புக்கு எனது வாழ்த்துக்கள். உங்கள் தலைமையில் இந்தியா-அமெரிக்கா உறவு புதிய வரலாறு படைக்கும்.

பிரதமர் மோடி: அமெரிக்காவின் 45வது அதிபராக தேர்வு செய்யப்பட்ட டிரம்ப்புக்கு எனது வாழ்த்துக்கள். இந்தியா-அமெரிக்கா உறவை புதிய உயரத்துக்கு கொண்டு செல்ல இணைந்து செயல்படும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். பிரசாரத்தின் போது இந்தியாவை பற்றி உயர்வாக பேசியதற்கு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்போதைய அதிபர் ஒபாமா: புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். வெள்ளை மாளிகைக்கு இன்று வரும்படி வரவேற்கிறேன். இதன்படி, டிரம்ப் இன்று வெள்ளை மாளிகைக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்ய அதிபர் புதின்: அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்ட டிரம்ப்பிற்கு எனது வாழ்த்துக்கள். மிகவும் சிக்கலான நிலையில் உள்ள அமெரிக்கா-ரஷ்யா உறவு இனிமேல் மேம்படும். ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை இருநாடுகளுக்கு இடையே நடைபெறும் என்று நான் நம்புகிறேன்.

இங்கிலாந்து பிரதமர் தெரசா மே: கடின பிரசாரத்திற்கு பின் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வு செய்யும் டிரம்ப்பிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இருநாடுகளும் ஏற்கனவே இணைந்து செயல்பட்டு வருகின்றன. இனிவரும் காலங்களிலும் இந்த நட்பு தொடரும் என நம்புகிறேன்.

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல்: ஜனநாயக முறைப்படி ஜெர்மனியும், அமெரிக்காவும் இணைந்து செயல்படும். புதிய அதிபர் டிரம்ப்புடன் இணைந்து செயலாற்றும் நாளை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்.

சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லூகாங்: புதிய அமெரிக்க அதிபர் தலைமையில் இருநாட்டு உறவுகள் மேம்படும் என்று நம்புகிறோம். 

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்: நீங்கள் பெற்றுள்ளது சரித்திர வெற்றி. அமெரிக்க மக்கள் விடுதலை, ஜனநாயகம், மனித உரிமை மீது நம்பிக்கை வைத்து உங்களை தேர்வு செய்துள்ளனர்.

கனடா பிரதமர் ஜஸ்டின்: அமெரிக்காவின் புதிய அதிபர் டிரம்ப்புடன் இணை்ந்து செயல்பட காத்து இருக்கிறோம்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...