பி.எஸ்.என்.எல் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்களுடன் மாநகராட்சி ஆணையர் ஆலோசனை


கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தலைமையில் மாநகராட்சி சாலைகள் பழுது சரி செய்த சில மாதங்களில் மீண்டும் சேதப்படுத்தப்படுவதைத் தடுக்கும் விதமாக ஒருங்கிணைந்த முறையில் பணிகளை செய்து முடிப்பது குறித்து பி.எஸ்என்.எல் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் வியாழனன்று (இன்று) நடைபெற்றது. 

இதுகுறித்து க.விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில், ''கோவை மாநகராட்சியில் சாலைகள் பழுது சரி செய்த சில மாதங்களில் பி.எஸ்என்.எல் துறையின் மூலம் கண்ணாடி இறைவடம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத் துறையின் மூலம் மின்சார வடங்கள் பூமிக்கடியில் கொண்டு செல்வதற்காக ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டு ஒருங்கிணைந்து சில சமயங்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதைத் தவிர்த்திடும் வகையில் ஒருங்கிணைந்த முறையில் பணிகளை செய்து முடிப்பது குறித்து பி.எஸ்.என்.எல் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.

மேலும், மாநகராட்சியில் சாலைப் பணிகள் நடைபெறும் இடங்கள், பணிகள் குறித்த விவரங்கள் மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தெரிந்துகொண்டு பி.எஸ்என்.எல் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பணிகள் அட்டவணைப் படுத்தப்பட்டு மாநகராட்சி அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு ஒருங்கிணைந்த முறையில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு எந்தவித பழுதும் இல்லாமல் சாலைகள் பராமரிக்கப்படும்''. 

இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், துணை ஆணையர் ப.காந்திமதி, நகரப் பொறியாளர் ராஜேந்திரன், பி.எஸ்என்.எல் கோட்டப்பொறியாளர் கொளஞ்சி, தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...