செனட் சபை- பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு: அமெரிக்க தேர்தலில் 2 தமிழர்கள் வெற்றி

அமெரிக்காவில் செனட் சபை, பிரதிநிதிகள் சபை ஆகியவை உள்ளன. இதில், செனட் சபை உறுப்பினர்கள் நம்ம ஊர் மேல்-சபை எம்.பி. போலவும், பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் மக்களவை எம்.பி. போலவும் செயல்படுவார்கள்.

அமெரிக்க அதிபர் தேர்தலுடன் ஒரு சில செனட்சபை, பிரதிநிதிகள் சபைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 5 பேர் போட்டியிட்டனர்.

செனட் சபைக்கு கமலா ஹாரிசும், பிரதிநிதிகள் சபைக்கு ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோகன்னா, அமிபேரா, பிரமிளா ஜெயபால் ஆகியோரும் போட்டியிட்டனர்.

இதில், செனட் சபைக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட வக்கீல் கமலா ஹாரிஸ் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து வெற்றி பெற்றுள்ளார்.

இவர், சென்னையை சேர்ந்தவர். இவரது தாயார் டாக்டர் சியாமளா கோபாலன். புற்றுநோய் நிபுணர் ஆவார். 1960-ம் ஆண்டு வாக்கில் அமெரிக்கா சென்ற அவர், அங்கு ஜமைக்காவை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் பிறந்தவர் தான் கமலா ஹாரிஸ்.

அதேபோல் இல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்து ராஜா கிருஷ்ணமூர்த்தி பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டார்.

ராஜா கிருஷ்ணமூர்த்தி தமிழர் ஆவார். அவர், குடும்பத்தினர் முதலில் டெல்லியில் வசித்து வந்தனர். ராஜா கிருஷ்ண மூர்த்திக்கு 3 வயது இருக்கும் போது, அமெரிக்காவுக்கு சென்றனர். அங்கு சட்டப்படிப்பு, என்ஜினீயரிங் படிப்பு ஆகியவற்றை படித்துள்ள அவர், தொழில் அதிபராகவும் இருந்து வந்தார். அரசியலில் ஈடுபட்டு இப்போது பிரதிநிதிகள் சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Newsletter

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...