கேஎம்சிஎச் சிட்டி சென்டர் நடத்தும் இலவச ஆக்குபேஷனல் தெரபி மற்றும் மருத்துவ ஆலோசனை முகாம்


கேஎம்சிஎச்-யின் ஒரு சிறப்பு பிரிவான ஆக்குபேஷனல் தெரபி சிகிச்சை துறையின் சார்பாக உலக ஆக்குபேஷனல் தெரபி தினத்தை முன்னிட்டு இலவச ஆக்குபேஷனல் தெரபி முகாம் நடத்தப்பட உள்ளது.

வரும் நவம்பர் மாதம் 12 மற்றும் 13-ம் தேதிகளில் கேஎம்சிஎச் சிட்டி சென்டர், ராம் நகரில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ள இந்த இலவச முகாமில் கேஎம்சிஎச் ஆக்குபேஷனல் தெரபி துறையின் அனுபவமிக்க மருத்துவர்களால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இலவச ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது. 

ஆக்குபேஷனல் தெரபி துறையானது உடல், மூளை மற்றும் மன வளர்ச்சி தொடர்புடைய பாதிப்புகளான கற்றலில் ஏற்படும் குறைபாடு, மூளை முடக்குவாதம், தசைவளக்கேடு, கை, கால் வலிப்பு நோய், மனவளர்ச்சி குறைபாடு மற்றும் மனநலிவு நோய் போன்ற பாதிப்புகளால் சிரமப்படும் குழந்தைகள் முதல், மூளை, தண்டுவட முடக்கு நோய், பக்கவாதம், தலைக் காயம், பார்கின்சன் நோய், கை, கால் நரம்பு பாதிப்பு, டிமென்ஷியா என்ற மறதிநோய் பாதிப்புகளாலும், மனநோய்களால் அவதிப்படும் பெரியவர்கள் வரை மறுவாழ்வு மருத்துவ சிகிச்சை அளிக்கும் சிறப்பு பெற்ற துறை ஆகும். 

எனவே குழந்தைகள், அவர்களின் பெற்றோர் மற்றும் பெரியவர்கள் இந்த இலவச ஆக்குபேஷனல் தெரபி மருத்துவ ஆலோசனை முகாமில் பங்கு பெற்று பயனடைந்துகொள்ளலாம் என கேஎம்சிஎச் மருத்துவமனையின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...