இந்திய விமானப் படையின் சார்பில் இந்துஸ்தான் கல்லூரியில் கண்காட்சி நிகழ்ச்சி


இந்திய விமானப் படையின் சார்பல் "தி கார்டியன்ஸ் ஆப் தி ஸ்கை" என்ற கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவையில் அமைந்துள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில், இந்திய விமானப் படையில் ஆட்கள் தேர்வு முறை, அதில் சேர்வதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 



இதனைத்தொடர்ந்து, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மண்டலம், அனுபவம் மற்றும் தகவல் மண்டலம் உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு செய்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. இதுகுறித்து விங் கமேண்டர் சங்கீதா நமது நிருபரிடம் கூறியதாவது:-

இந்நிகழ்ச்சி நடத்தியதற்கான முக்கிய நோக்கம் மாணவ, மாணவிகளிடையே இந்திய விமானப்படையின் மீதுள்ள ஆர்வத்தை தூண்டவும், ஊக்குவிப்பதுமாகும். இதுகுறித்த முழுமையான விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். அனைத்துத் தரப்பினரிடமும் இதனைக் கொண்டுசேர்க்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.



இதைத்தொடர்ந்து, மாணவர்கள், விமானப் படையில் சேர்வதற்கான தேர்வு முறைகள், தகுதி, விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து கேட்டுத் தெரிந்துகொண்டனர். பின், இந்திய விமானப் படையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விமானப் போக்குவரத்து உள்ளிட்டவை அடங்கிய பேருந்தினை பார்வையிட்டனர். இதில், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கருவி, உபகரணம், மேற்கொள்ளும் வழிமுறைகள் உள்ளிட்டவைகள் கண்காட்சிப் படுத்தப்பட்டன.படுத்தப்பட்டன. 



இதனைத்தொடர்ந்து அருகில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இந்திய விமானப் படையின் கண்காட்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், இந்த கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இதன் மூலம் விமானப் படையில் சேர்வதற்கான ஊக்கம் ஏற்பட்டுள்ளது. கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த விமானக் கட்டுப்பாட்டுக் கருவிகளை இயக்கியது நல்ல அனுபவத்தை ஏற்படுத்தியது என்றனர்.



இந்நிகழ்ச்சியில், விமானப்படை நிர்வாகக் கல்லூரி ஏர் விங் கமேன்டர் பி.கனேசன், அணித் தலைவர் கல்பனா குமாரி, பெங்களுரில் இருந்து அணித் தலைவர் நிசாந்த் தீக்சித், விமானப்படை நிர்வாகக் கல்லூரி இளைஞர் வாரண்ட் அதிகாரி சாகு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...