ரூ.9.15 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்ட மாநகராட்சி - ஆணையர் தகவல்

கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.9.15 கோடி மதிப்பிலான 1.18 ஏக்கர் அளவிலான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில், 

''கோவை மாநகராட்சியிலுள்ள ஐந்து மண்டலங்களான கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தியம் ஆகிய வார்டு பகுதிகளிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடங்களை உதவி நகரமைப்பு அலுவலர்கள் மூலம் இடங்களை கண்டறிந்து, விரைவில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், முதற்கட்டமாக ஞாயிறன்று (இன்று) வரை மாநகராட்சியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ரூ.9.15 கோடி மதிப்பிலான 1.18 ஏக்கர் பொது ஒதுக்கீடு இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியின் மேற்கு மண்டலம், வார்டு 6-ல் கவுண்டம்பாளையம், ராமகிருஷ்ணா நகரில் விளையாட்டு மைதானமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான 29 சென்ட் அளவிலான இடங்களும், மத்திய மண்டலம், வார்டு 51-ல் காந்திபுரம், 100-அடி சாலை, 8-வது தெருவில் சிவா கார்ஸ் என்னும் பழைய நான்கு சக்கர வாகனம் விற்கும் இடமாக உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான 2 சென்ட் அளவிலான இடங்களும் மீட்கப்பட்டன.



இதேபோன்று, கிழக்கு மண்டலம், வார்டு 36-ல் காளப்பட்டி, சிவா நகரில் கோவில் நிளமாக ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.95 லட்சம் மதிப்பிலான 14.5 சென்ட் அளவிலான இடங்களும், வடக்கு மண்டலம், வார்டு 28-ல் சரவணம்பட்டி, சங்கரா நகரில் குடிசைகள் அமைத்து ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான 31 சென்ட் அளவிலான இடங்களும் மீட்கப்பட்டது.





இதனைத்தொடர்ந்து, தெற்கு மண்டலம், வார்டு 91-ல் காயத்திரி நகரில் சாலை ஓரங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.4.2 கோடி மதிப்பிலான 42 சென்ட் அளவிலான இடங்களும் என மொத்தம் சுமார் ரூ.9.15 கோடி மதிப்பிலான 1.18 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.



மேலும், இதுபோன்ற ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் தொடர்ந்து மீட்கப்படும்.'' என தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...