என்டிடிவியை தொடர்ந்து மேலும் 2 சேனல்களுக்கு தடை

புதுடெல்லி: என்டிடிவி இந்தி சேனலுக்கு ஒரு நாள் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேலும் இரண்டு சேனல்களுக்கு ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்துள்ளது. பதன்கோட் தாக்குதலை ஒளிபரப்பிய என்டிடிவி இந்தி சேனலுக்கு நவம்பர் 9ம் தேதி ஒரு நாள் ஒளிபரப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. தேசிய நலனை கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். ஆனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், ஜனநாயக அமைப்புகள், பத்திரிக்கையாளர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இரண்டாவது எமர்ஜென்சியை போல பிரதமர் மோடியின் ஆட்சி உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த சூழலில் என்டிடிவியை தொடர்ந்து மேலும் இரண்டு சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அசாமில் உள்ள நியூஸ் டைம் அசாம் என்ற சேனலுக்கும், கேர்வேர்ல்டு டிவி என்ற சேனலுக்கும் அதே 9ம் தேதி தொடங்கி 10ம் தேதி வரை ஒருநாள் ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆணையை கடந்த 2ம் தேதி மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Newsletter

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...

பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் மற்றும் வனங்கள் தினம் கொண்டாடப்பட்டது

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொ...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...