கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொண்டாடப்பட்டது. சுற்றுப்புற சூழல் பொறியியல் துறை சார்பில் நடத்தப்பட்ட விழாவில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழாவில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.
Coimbatore: கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28, 2026 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுற்றுப்புற சூழல் பொறியியல் துறை சார்பாக நடத்தப்பட்ட இந்த விழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் சிறப்பு மிக்கதாக அமைந்தது.
விழாவில் பார்க் கல்வி குழுமங்களின் முதன்மை செயல் அதிகாரி Dr. அனுஷா ரவி தலைமையேற்று உரையாற்றினார். பொறியியல் கல்வி பயிலும் அனைத்து துறை மாணவர்களும் தண்ணீரின் முக்கியத்துவம், அதை சேமிப்பது, பாதுகாப்பது குறித்தும், மரங்களை நட்டு புதிய வனங்களை உருவாக்குவது, இருக்கின்ற வளங்களை பாதுகாப்பது குறித்தும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கல்லூரியின் சுற்றுப்புற சூழல் பொறியியல் துறையின் முன்னாள் மாணவரும், TUV இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டாளருமான ரஞ்சித் குமார் சின்னசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதில் சுற்றுப்புற சூழல் பொறியியல் துறை மாணவர்களின் பங்களிப்பு குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

விழாவில் உலக தண்ணீர் தினம் மற்றும் வனங்கள் தினத்தை முன்னிட்டு மாணவ மாணவியருக்கு வினாடி வினா, பேச்சு போட்டி, ஓவிய போட்டி ஆகியவை நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. விழாவில் கல்லூரியின் முதல்வர் Dr. கே குமரேசன் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவை சுற்றுப்புற சூழல் பொறியியல் துறையின் தலைவர் Dr. சி அங்காளபரமேஸ்வரி, துணைத்தலைவர் Dr. ஆர் ஹரிஷ், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஏ ராஜா மற்றும் ஆசிரியர் பெருமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். விழாவின் போது விருந்தினர்கள் மற்றும் மாணவ மாணவிகள் 100 மரக்கன்றுகளை கல்லூரி வளாகத்தில் நட்டு சிறப்பித்தனர்.
விழாவில் பார்க் கல்வி குழுமங்களின் முதன்மை செயல் அதிகாரி Dr. அனுஷா ரவி தலைமையேற்று உரையாற்றினார். பொறியியல் கல்வி பயிலும் அனைத்து துறை மாணவர்களும் தண்ணீரின் முக்கியத்துவம், அதை சேமிப்பது, பாதுகாப்பது குறித்தும், மரங்களை நட்டு புதிய வனங்களை உருவாக்குவது, இருக்கின்ற வளங்களை பாதுகாப்பது குறித்தும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கல்லூரியின் சுற்றுப்புற சூழல் பொறியியல் துறையின் முன்னாள் மாணவரும், TUV இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டாளருமான ரஞ்சித் குமார் சின்னசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதில் சுற்றுப்புற சூழல் பொறியியல் துறை மாணவர்களின் பங்களிப்பு குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
விழாவில் உலக தண்ணீர் தினம் மற்றும் வனங்கள் தினத்தை முன்னிட்டு மாணவ மாணவியருக்கு வினாடி வினா, பேச்சு போட்டி, ஓவிய போட்டி ஆகியவை நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. விழாவில் கல்லூரியின் முதல்வர் Dr. கே குமரேசன் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவை சுற்றுப்புற சூழல் பொறியியல் துறையின் தலைவர் Dr. சி அங்காளபரமேஸ்வரி, துணைத்தலைவர் Dr. ஆர் ஹரிஷ், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஏ ராஜா மற்றும் ஆசிரியர் பெருமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். விழாவின் போது விருந்தினர்கள் மற்றும் மாணவ மாணவிகள் 100 மரக்கன்றுகளை கல்லூரி வளாகத்தில் நட்டு சிறப்பித்தனர்.