என்டிடிவியை தொடர்ந்து மேலும் 2 சேனல்களுக்கு தடை

புதுடெல்லி: என்டிடிவி இந்தி சேனலுக்கு ஒரு நாள் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேலும் இரண்டு சேனல்களுக்கு ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்துள்ளது. பதன்கோட் தாக்குதலை ஒளிபரப்பிய என்டிடிவி இந்தி சேனலுக்கு நவம்பர் 9ம் தேதி ஒரு நாள் ஒளிபரப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. தேசிய நலனை கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். ஆனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், ஜனநாயக அமைப்புகள், பத்திரிக்கையாளர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இரண்டாவது எமர்ஜென்சியை போல பிரதமர் மோடியின் ஆட்சி உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த சூழலில் என்டிடிவியை தொடர்ந்து மேலும் இரண்டு சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அசாமில் உள்ள நியூஸ் டைம் அசாம் என்ற சேனலுக்கும், கேர்வேர்ல்டு டிவி என்ற சேனலுக்கும் அதே 9ம் தேதி தொடங்கி 10ம் தேதி வரை ஒருநாள் ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆணையை கடந்த 2ம் தேதி மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...