ஈராக்கில் கடும் போர் ஐ.எஸ். தீவிரவாதி தலைவர் பக்தாதி மொசூலில் இருந்து தப்பி ஓட்டம்

ஈராக்கில் கடும் போர் நடைபெறுவதால் மொசூலில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதி தலைவர் பக்தாதி தப்பி ஓடி விட்டார்.

ஈராக்கில் ஐ.எஸ். தீவிர வாதிகளிடம் இருந்து மொசூல் நகரை கைப்பற்றுவதில் ராணுவம்  தீவிரமாக உள்ளது. அமெரிக்கா மற்றும் குர்து படையினரின் ஆதரவுடன் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

போர் கடுமையாக இருப்பதால் தாக்கு பிடிக்க முடியாமல் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஓட்டம் பிடித்துள்ளனர். இதனால் மொசூலின் பெரும்பாலான பகுதிகள் ஈராக் ராணுவம் வசம் வந்து விட்டது.

இதற்கிடையே, ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்- பக்தாதி நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்தார். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என தெரியாமல் இருந்தது.

போர் உச்ச கட்டத்தை அடைந்த நிலையில் திடீரென அவரது பேச்சு அடங்கிய ஆடியோ வெளியானது. அதில் மொசூல் நகரை தக்க வைக்க ஐ.எஸ். அமைப்பினர், தொடர்ந்து போராட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். எனவே  அவர் மொசூலில் பதுங்கி இருக்கலாம் என கருதப்பட்டது.

ஆனால் அவர் மொசூல் நகரில் இல்லை. அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் என இங்கிலாந்து வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய நாடுகள் அமைப்பின் உளவுத் துறை அளித்துள்ள  தகவலின் அடிப்படையில் தாம் இதை தெரிவிப்பதாக அவர் கூறி யுள்ளார். 

Newsletter

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...