சிலி நாட்டில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டரில் 6.4 ஆக பதிவு

சாண்டியாகோ: சிலி தலைநகர் சாண்டிகோவின் தெற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் சாண்டியகோவின் தெற்கு பகுதியில் இருந்து 192 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.4-ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த பயங்கர நிலநடுக்கத்தால் தலைநகர் சாண்டியகோவில் கட்டடங்களில் அதிர்வு ஏற்பட்டது. அதேபோல் நாட்டின் பல்வேறு பதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இருப்பினும், சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை என்று சிலி நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர்ச்சேதம் பற்றிய உடனடி தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

இதற்கு முன்பு கடந்த 2010-ம் ஆண்டில் 8.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கமும், சுனாமியும் தாக்கியதில் சிலியில் 500 பேர் பலியாகினர். 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...