பொது சிவில் சட்டத்தை எதிர்த்து நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்


தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நினைக்கும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் உபைதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாநில தலைவர் சர்மிளா பேசுகையில்; இந்திய அரசியலமைப்பின் சட்டத்தின் 25ம் பிரிவு இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் தங்கள் விரும்பிய மதத்தை பின்பற்றவும், நடைமுறைபடுத்தவும், பரப்பவும் உரிமை அளித்துள்ளது. இந்நிலையில், தற்போது ஆட்சி செய்யக்கூடிய மத்திய அரசு முஸ்லீம்கள் பின்பற்றும் ஷரீஅத் சட்டத்தை பின்பற்றுவதை தடுத்து பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இந்த முயற்சி முஸ்லீம் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான போர் என அவர் தெரிவித்தார். 

இதில், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு உறுப்பினர் நஷீமா, விமன்ஸ் இந்தியா மூவ்மெண்ட் மாநில பொதுச் செயலாளர் பர்ஜானா மற்றும் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...