பெட்ரோல் பங்க் நேரம் குறைப்பு!


நவம்பர் 5ம் தேதியன்று (வெள்ளி) முதல், பெட்ரோல் பங்குகளின் நேரம் குறைக்கப்படும் எனவும், வார விடுமுறை அளிக்கப்படும் எனவும் தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் விற்பனையாகும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு, டீலர் கமிஷனை உயர்த்தி வழங்குமாறு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் எண்ணெய் நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்தனர். அதை மத்திய அரசு அமைத்த கமிட்டி பரிந்துரை செய்தும், எண்ணெய் நிறுவனங்கள் அமல்படுத்தவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களை அறிவித்துள்ளனர். அதன்படி, கடந்த மாதம் இரவு 7 மணி முதல் 7.15 மணி வரை பங்குகள் மூடப்பட்டன. 

இந்நிலையில், தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் கூட்டமைப்பின் தலைவர் முரளி செய்தியாளர்களிடம் பேசிய போது, ''டீலர் கமிஷன் தொடர்பாக, எண்ணைய் நிறுவனங்களிடம் மும்பையில் இன்று பேச்சு வார்த்தை நடக்கிறது. பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை எனில், நாளை (நவ.5ம் தேதி) முதல் பெட்ரோல் பங்க்கில் விற்பனை நேரம் குறைக்கப்படும். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பெட்ரோல் பங்க் இயங்கும். அதன் பின் வங்கிகள் போல் வாரவிடுமுறையும் விடப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...