கோவையில் காதலியை தாக்கிய காதலன் கைது

திருமணம் செய்ய மறுத்த காதலியை பல்கலைக் கழக வளாகத்தின் உள்ளேயே கண்ணாடி பாட்டிலால் காதலன் 

தாக்கியதைத்தொடர்ந்து தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சிவில் பொறியியல் பட்டதாரி இளைஞரான வேம்புராஜ் என்பவருக்கும், கனகலட்சுமி என்பவருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டு சில காலமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், பாரதியார் பல்கலைக் கழகத்தில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்துவரும் கனகலட்சுமியைக் காண வேம்புராஜ் சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து இன்னும் ஒரு மாதத்திற்குள் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என வேம்புராஜ் கூறியதாகக் கூறப்படுகிறது. இதற்கு கனகலட்சுமி மறுப்பு தெரிவித்த நிலையில் ஆத்திரமடைந்த வேம்புராஜ் அருகில் இருந்த கண்ணாடி பாட்டிலால் கனகலட்சுமியின் கழுத்தில் பலமாக தாக்கிவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ரத்தவெள்ளத்தில் கிடந்த கனகலட்சுமியை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட வடவள்ளி காவல் துறையினர் வேம்புராஜின் மீது பெண் வன்கொடுமைச் சட்டம், தமிழ்நாடு மகளிர் துண்புறுத்துதல் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து தலைமறைவாக இருந்த அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...