காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: ராணுவ வீரர் உட்பட 2 பேர் பலி

காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி உட்பட பல பகுதிகளில், பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நேற்று தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்.

காஷ்மீர் எல்லையில் இந்திய வீரர் மான்ஜீத் சிங்கை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று உடலைத் துண்டாக்கினர். இதில் அதிர்ச்சி அடைந்த ராணுவத்தினர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் மீது 2 நாட்களுக்கு முன்னர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 4 முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் 20-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் உள்ள மென்தாம் செக்டார் மற்றும் ரஜோரி பகுதி யில் மன்காட், பாலாகோட் ஆகிய இடங்களில் எல்லைக் கட்டுப் பாட்டு கோட்டருகே நேற்று காலை 9 மணியளவில் பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்

மேலும், சிறிய ரக 120 மி.மீ., மற்றும் 82 மி.மீ. பீரங்கி குண்டுகளை இந்தியப் பகுதியில் வீசி தாக்குதல் நடத்தினர்.இரு தரப்புக்கும் இடையில் பல மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ரஜோரி செக்டார் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் பிமல் தமாங்(20) என்ற ராணுவ வீரர் பலியானார். மேலும் தவ்ஸீர் பீ(50) என்ற பெண்ணும் பலியானார்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...