தமிழக-கேரள எல்லையில் மாவோயிஸ்ட்கள் முகாம்: தேடுதல் வேட்டையில் தமிழக அதிரடிப்படை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் தமிழக-கேரள எல்லையில் மாவோயிஸ்ட்களின் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் கேரள எல்லை பகுதியான மஞ்சூர், கெத்தை, கிண்டகொரை மற்றும் அப்பர்பவாணி உள்ளிட்ட இடங்களில் கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களை சேர்ந்த மாவோயிஸ்ட்கள் ஊடுருவி இருப்பதாக கூறப்படுகிறது. மலைப்பகுதிகளில் இவர்களின் நடமாட்டத்தை கண்டறியப்பட்டுள்ளதால் மாநில காவல் துறையினர் அவர்களை தேடும் வேட்டையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்ட்களின் தலைவர் விக்கரமகவுடா மற்றும் சோமன்பத்மநாபன் உட்பட 32 பேரின் புகைப்படங்களை பேனர்களாக கட்டி பொதுமக்களின் பார்வைக்காக காவல்துறையினர் வைத்துள்ளனர்.

மஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் மலைவாழ் மக்கள் மற்றும் மலை கிராமங்களில் வசிப்பவர்களிடம் புதியவர்கள் நடமாட்டம் தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். காவல்துறையினர் ஒட்டியுள்ள மாவோயிஸ்ட்களின் புகைப்படங்களில் 12 பெண்களும் இடம் பெற்றுள்ளனர். கேரள மாநிலம் பாலக்காட்டை ஒட்டிய அப்பர்பவாணி மற்றும் கின்டகொரை, கெத்தை, முல்லை உள்ளிட்ட இடங்களில் தமிழக அதிரடி படையினர் 5 குழுக்களாக பிரிந்து தேடுதல வேட்டை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...