திண்டுக்கல்லில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டிக் கொலை

திண்டுக்கல்லைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் திங்கள்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

திண்டுக்கல் பாரதிபுரம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பி.மணிமாறன் என்ற வாட்டார் மணி (38). ஆட்டோ ஓட்டுநரான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்து மக்கள் கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார். பின்னர், இந்து முன்னணி அமைப்பில் இணைந்து மாவட்ட செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் மண்டலத் தலைவர் தர்மாவுடன், மணிமாறனுக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாரதிபுரத்தில் உள்ள இந்து மக்கள் கட்சி அலுவலகம் அருகே திங்கள்கிழமை இரவு மணிமாறன் ஆட்டோவை நிறுத்தியுள்ளார்.

அப்போது, இந்து மக்கள் கட்சி நிர்வாகி தர்மா உள்ளிட்ட சிலர், மணிமாறனுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்த மோதலில் கத்தியால் குத்தப்பட்ட மணிமாறன், அண்ணாநகரில் உள்ள தனது வீட்டை நோக்கி ஓடியுள்ளார். அவரை விடாமல் துரத்தி வந்த 2 நபர்கள், மணிமாறனின் வீட்டு வாசலில் அவரை வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். அப்போது, மணிமாறனைக் காப்பாற்ற முயன்ற அவரது மனைவி பிரியாவுக்கும் காயம் ஏற்பட்டது. 

பின்னர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மணிமாறன் உயிரிழந்தார்.

இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...