சவுதி கூட்டுப்படைகள் ஏமன் சிறை மீது வான்தாக்குதல்: 60 கைதிகள் கொன்றுகுவிப்பு

ஏமன் நாட்டில் அமெரிக்காவின் ஆதரவுடன் ஆட்சி நடத்திவந்த அதிபர் மன்சூர் ஹாதியை ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆட்சியில் இருந்து விரட்டினர். அவர் தற்போது, சவுதி அரேபியாவில் ரியாத் நகரில் இருக்கிறார்.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள், தலைநகர் சனாவையும் தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர். அங்கு தொடர்ந்து அதிபர் ஆதரவு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இதில் கொல்லப்பட்டுள்ளனர். 31 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்த சண்டையில், அதிபர் மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபியா தலைமையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய 9 நாடுகளின் கூட்டுப்படைகள் களம் இறங்கி, ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறி வைத்து வான்தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த சண்டையில் அப்பாவி பொதுமக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டுவருவது கடும் அதிருப்தியை சர்வதேச அரங்கில் ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மாதம் அங்கு ஒருவரது மரணத்தை தொடர்ந்து இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த ஒரு அரங்கத்தில் சவுதி கூட்டுப்படையினர் நடத்திய வான் தாக்குதலில் 140 பேர் கொன்று குவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது. தவறான தகவலின்பேரில் அந்த தாக்குதல் நடத்தப்பட்டு விட்டது என சவுதி கூட்டுப்படையினர் கூறினர்.

இந்த நிலையில் அங்கு அதிபர் ஆதரவு படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான 72 மணி நேர சண்டை நிறுத்தம் முடிந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் ஹூதய்தா என்ற இடத்தில் உள்ள சிறை வளாகத்தின் மீது சவுதி கூட்டுப்படையினர் 3 முறை வான்தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 60 கைதிகள் உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இதை அந்த நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

இந்த வான்தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டு, சிகிச்சை தரப்படுகிறது.

இந்த வான்தாக்குதல் நடைபெற்றபோது சிறையில் 84 கைதிகள் அடைக்கப்பட்டிருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

ஏமனுக்கான ஐ.நா. சிறப்பு தூதர் இஸ்மாயில் குல்டு ஷேக் அகமது அளித்த புதிய சமரச திட்டத்தை அதிபர் மன்சூர் ஹாதி நிராகரித்த நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...