வீட்டை காலி செய்யச் சொல்லி மிரட்டும் பூசாரி- ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், கனுவாய் பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மனைவி ராஜராஜேஷ்வரி (38). அப்பகுதியில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களது வீட்டின் அருகில் உள்ள கருப்பராயன் கோவில் பூசாரி தொடர்ந்து இவர்களது வீட்டினை காலி செய்யுமாறு மிரட்டுவதாக மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்தனர். இதுகுறித்து ராஜராஜேஷ்வரி கூறுகையில்,

''கனுவாய் பகுதியில் சொந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். எனக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். எங்களது வீட்டின் கட்டிடத்தில் ஒரு பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளேன். எங்களது வீட்டில் இருந்து சுமார் 30 அடி தூரத்தில் கருப்பராயன் கோவில் உள்ளது. அங்கு பூசாரியாக மணி என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், எங்களது வீட்டினை காலி செய்துவிட்டு வீட்டினை கோவிலுக்கு தந்துவிடுமாறு அந்த கோவில் பூசாரியும், அவரது மனைவியும் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். நான் அதற்கு மறுப்பு தெரிவித்தநிலையில், தொடர்ந்து அவரும், அவரது மனைவியும் கடவுளின் பெயரைச் சொல்லி எங்களது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். வீட்டினை காலி செய்யாவிட்டால் பல அசம்பாவிதங்கள் ஏற்படும் என கூறுகின்றனர். 

இந்த விசயத்தில் உடனடியாக ஆட்சியர் தலையிட்டு கடவுளின் பெயரைக் கூறி மிரட்டி வரும் கருப்பராயன் கோவில் பூசாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குடும்பத்தினருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு கருப்பராயன் கோவில் பூசாரி மணியே காரணம்'' என கூறினார்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...