திருமலையம்பாளையத்தில் யானைகள் தொடர் அட்டகாசம்!


கோவை திருமலையாம் பாளையம் விவசாய நிலத்திற்குள் இரண்டாவது நாளாக புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த 600 க்கும் மேற்ப்பட்ட வாழை மரங்களை நாசம் செய்தது, வனத்துறை அலட்சியத்தால் விவசாய பயிர்கள் நாசமடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

கோவை திருமலையாம் பாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பரின் தோட்டத்திற்குள் நேற்று முன் தினம் புகுந்த 13 காட்டு யானைகள் அங்கு பயிரிடப்பட்ட ஒரு ஏக்கர் தக்காளி பயிர் மற்றும் தென்னை, வாழை , தேக்கு மரங்களை நாசம் செய்தது, இதை அடுத்து விடிய விடிய போராடி யானை காட்டுக்குள் விரட்டியடிக்கப்பட்டது, இதை தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று இரவு 11 மணியளவில் 3 குட்டிகளுடன் மொத்தம் 9 யானைகள் பக்கத்துத்தோட்டமான கோயஸ் தோட்டம் உரிமையாளர் பி.வி. முகமது தாஷிர் என்பரின் தோட்டத்தில் புகுந்து அங்கு பயிரிடப்பட்ட 600 க்கும் மேற்ப்பட்ட வாழை மரங்களையும் முற்றிலுமாக நாசம் செய்தது. 



மேலும் சுற்றுச்சுவரை உடைத்து அங்குள்ள ஒரு தொழிற்சாலைக்குள் செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்ப்பட்டது. மாலை 3 மணிக்கே வருவதாக கூறிய வனத்துறையினர், இரவு ஒரு மணி வரை வராத்தால் அப்பகுதி விவசாயிகளே வனத்திற்குள் விரட்டியடித்தனர். வனத்துறைத்துறையினர் அலச்சியபோக்கே இந்த நாசத்திற்கு காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.  மேலும் விரட்டியடிக்கப்பட்ட யானைகள் பக்கத்துத்தோட்டதிற்குள் நுழைந்ததால் இரவு முழுவதும் தூங்காமல் அப்பகுதி விவசாயிகள் விழித்திருக்க நிலை ஏற்ப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...

மேற்காசிய போர் நெருக்கடியை எதிர்கொள்ளும் வலிமை இந்தியாவுக்கு உண்டு - வானதி சீனிவாசன்

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மேற்காசிய போர் நெருக்கடியை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொள்கிறது என்றும், ம...

கோவை வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் 72 சதவீத வாக்குப் பதிவு; இன்று முடிவுகள் அறிவிப்பு

கோவை வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் 3,647 வாக்காளர்களில் 2,626 பேர் வாக்களித்தனர். தலைவர், துணைத் தலைவர், செயலாளர...