இந்திய எல்லை பாதுகாப்பு படையினரின் அதிரடி தாக்குதலில் 15 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்

காஷ்மீர் எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்திவரும் பாகிஸ்தான் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து, நேற்று வீரமரணம் அடைந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஜித்தேந்திர குமாரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செய்யும் நிகழ்ச்சியில் இந்திய எல்லை பாதுகாப்பு படையின் கூடுதல் இயக்குனர் அருண் குமார் இன்று பங்கேற்றார்.

அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் நமது வீரர் குர்னாம் சிங் படுகாயம் அடைந்தது முதல் நமது எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் படையை சேர்ந்த 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என கூறினார்.

எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற இரண்டு முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ளவர்கள் மிகவும் துடிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். அவர்களின் எல்லாவகை சவால்களையும் எதிர்கொள்ள நமது வீரர்கள் விழிப்புணர்வுடன் தயார்நிலையில் காத்திருக்கின்றனர் எனவும் அருண் குமார் தெரிவித்தார்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...