மலேசியா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: இந்தியர்கள் உள்பட 6 பேர் பலி

கோலாலம்பூர்: தெற்கு மலேசியாவில் உள்ள பொது மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மலேசியாவின் ஜோகூர் பாரு என்ற பகுதியில் இயங்கி வரும் சுல்தானா அமீனா மருத்துவமனையில் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது. மருத்துவமனையின் இரண்டாம் தளத்தில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்து மருத்துவமனை கட்டிடம் முழுவதும் மளமளவென பரவியது.

இந்த விபத்தில், 4 பெண்கள், இரண்டு ஆண்கள் என 6 பேர் உயிரிழந்தனர். இதில் 3 பேர் இந்திய வம்சாவளியினர் என போலீசார் தெரிவித்துள்ளனர். தீ விபத்தில் சிக்கிய மேலும் ஒருவர் 80 சதவீத காயங்களுடன் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தின் போது மருத்துவமனைக்குள் சிக்கிக்கொண்ட 294 நோயாளிகளும், 193 ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசாரும், தீயணைப்பு துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...