சிகிச்சைக்குப் பின் குட்டி ஈன்ற காட்டு யானை- வனத்துறையினர் மகிழ்ச்சி

உடல் நலம் பாதிக்கப்பட்டு வனத்துறையினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பெண் காட்டு யானை திங்களன்று ஆண் குட்டியை ஈன்றது.

கோவை, பெரிய தடாகம் அருகே உள்ள வனப்பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த பெண் காட்டு யானைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வனத்துறை மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், வயிற்றில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் பாதிக்கப்பட்ட அந்த பெண் யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பதற்காக சாடிவயல் யானைகள் முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், திங்களன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் அந்த பெண் யானை ஒரு ஆண் குட்டியை ஈன்றது. இதைத்தொடர்ந்து அந்த இரு யானைகளுக்கும் வனத்துறையினர் சிகிச்சை மற்றும் உணவை வழங்கி பாதுகாத்து வருகின்றனர். 

உடல் நலம் பாதிக்கப்பட்டு பரிதாப நிலையில் மீட்கப்பட்ட பெண் காட்டு யானை தற்போது குட்டி ஈன்று நல்லமுறையில் உள்ளதால் அதனை மீட்ட வனத்துறையினர் மற்றும் வனத்துறை மருத்துவர்கள் மனோகரன் மற்றும் விஜயராகவன் ஆகியோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...

கோவையில் நடைபெற்ற புற்றுநோய் சிகிச்சை மாநாடு: நவீன நோய் எதிர்ப்புச் சிகிச்சை முறைகள் குறித்த விரிவான விவாதம்

கோவை KMCH மருத்துவமனையில் TAMPOS நடத்திய மூன்றாவது மாநாடு லீ மெரிடியன் ஹோட்டலில் மார்ச் 20 முதல் 22 வரை நடைபெற்றது. புற்...

கோவை P.N.புதூரில் பகத்சிங் மற்றும் வே.கௌதம்குமார் நினைவு தினம் அனுசரிப்பு

கோவை மேற்கு மண்டல P.N.புதூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக விடுதலை போராட்ட வீரர் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆ...