ஆந்திரா-ஒடிசா எல்லையில் நடந்த என்கவுண்டரில் 19 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

மால்கான்கிரி, ஆந்திரா - ஒடிசா மாநில எல்லையில் நடந்த என்கவுண்டரில் 19 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

ஆந்திர பிரதேசம் - ஒடிசா எல்லையில் இருமாநில போலீசாரும் இணைந்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் நேற்று இரவு ஈடுபட்டனர். அப்போது மால்கான்கிரியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவியில் இருந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் முகாம் மீது போலீஸ் படை தாக்குதல் நடத்தியது. மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கூட்டத்திற்கு கூடியிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கூட்டத்தில் சுமார் 50-60 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கலந்துக் கொண்டனர் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்று இரவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

சண்டை நடைபெற்ற இடத்தில் இருந்து வெடிப்பொருட்கள் மற்றும் மூன்று ஏ.கே. 47 துப்பாக்கிகள் மற்றும் பல்வேறு ரகத்தை சேர்ந்த துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மால்கான்கிரி மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகும். 

மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று போலீசாரும் காயம் அடைந்து உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Newsletter

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...

கோவையில் நடைபெற்ற புற்றுநோய் சிகிச்சை மாநாடு: நவீன நோய் எதிர்ப்புச் சிகிச்சை முறைகள் குறித்த விரிவான விவாதம்

கோவை KMCH மருத்துவமனையில் TAMPOS நடத்திய மூன்றாவது மாநாடு லீ மெரிடியன் ஹோட்டலில் மார்ச் 20 முதல் 22 வரை நடைபெற்றது. புற்...

கோவை P.N.புதூரில் பகத்சிங் மற்றும் வே.கௌதம்குமார் நினைவு தினம் அனுசரிப்பு

கோவை மேற்கு மண்டல P.N.புதூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக விடுதலை போராட்ட வீரர் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆ...

கோவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம்

கோவை அவிநாசி சாலையில் உள்ள எம்.என்.சி.ஆர். கிராண்ட் பேலஸில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி ஆல...

கோவை மழலைகள் 20 நிமிடங்களில் 1376 கணக்குகள் - செந்தில் பாலாஜி பாராட்டு

கோவை வெள்ளலூரில் உள்ள Agaram Kids Montessori பள்ளியில் யு.கே.ஜி பயிலும் மழலைகள் 20 நிமிடங்களில் 1376 கணக்குகளை செய்து சா...

திராவிட மாடல் ஆட்சியில் ஈர்க்கப்பட்டு அதிமுக மாற்று அணியினர் 300 பேர் திமுகவில் இணைப்பு

கோவை கொடிசியாவில் அதிமுக மாற்று அணி மாவட்ட செயலாளர்கள் மோகன்ராஜ், குணாளன், முருகேசன் உட்பட 300க்கும் மேற்பட்டோர் முதல்வர...