வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

கோவை, கணபதி மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் அழகிரி. இவரது மகன் கருப்பசாமி (37). இவரும், இவரது மனைவியும் சனிக்கிழமையன்று வழக்கம்போல் வேலைக்குச் சென்றுள்ளனர். பின் வேலை முடிந்து மாலை கருப்பசாமி வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்துள்ளது.

இதுகுறித்து, கருப்பசாமி சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததைத்தொடர்ந்து, காவல் துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். இருப்பினும் எவ்வித தடையங்களும் கிடைக்கவில்லை என காவலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...

மேற்காசிய போர் நெருக்கடியை எதிர்கொள்ளும் வலிமை இந்தியாவுக்கு உண்டு - வானதி சீனிவாசன்

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மேற்காசிய போர் நெருக்கடியை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொள்கிறது என்றும், ம...

கோவை வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் 72 சதவீத வாக்குப் பதிவு; இன்று முடிவுகள் அறிவிப்பு

கோவை வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் 3,647 வாக்காளர்களில் 2,626 பேர் வாக்களித்தனர். தலைவர், துணைத் தலைவர், செயலாளர...

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...