ஐஏஎஸ் அகாடமி தீ விபத்தில் பாதித்த மாணவர்களை அமைச்சர்கள் நேரில் சந்தித்தனர்

கோயம்புத்தூர், காந்திப்பார்கில் உள்ள கே.பி.ஆர் ஐஏஎஸ் அகாடமி பயிற்சி வளாகத்தில் நேற்று மாலை 5.00 மணியளவில் திடீர் என ஏற்பட்ட நச்சுப்புகையினால் அங்கு படித்துக்கொண்டிருந்த காயத்ரி, அரங்கநாதன், விஜயலட்சுமி, முத்துமணிகண்டராஜா, கிரிராஜன் ஆகிய மாணவர்களுக்கு  திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து, உடனடியாக அரசு மருத்துகல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டு சிறப்பான சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். இவ்விபத்தில் சக்திவேல் என்ற மாணவன் மருத்துமனை அழைத்துசெல்லும் வழியிலேயே மரணமடைந்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன், மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே அர்ச்சுனன், மருத்துவக்கல்லூரி முதல்வர் எட்வின்ஜோ, துணை ஆணையர் காந்திமதி, வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் சவுந்தரவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...

கோவையில் நடைபெற்ற புற்றுநோய் சிகிச்சை மாநாடு: நவீன நோய் எதிர்ப்புச் சிகிச்சை முறைகள் குறித்த விரிவான விவாதம்

கோவை KMCH மருத்துவமனையில் TAMPOS நடத்திய மூன்றாவது மாநாடு லீ மெரிடியன் ஹோட்டலில் மார்ச் 20 முதல் 22 வரை நடைபெற்றது. புற்...

கோவை P.N.புதூரில் பகத்சிங் மற்றும் வே.கௌதம்குமார் நினைவு தினம் அனுசரிப்பு

கோவை மேற்கு மண்டல P.N.புதூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக விடுதலை போராட்ட வீரர் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆ...