உக்கிரமான சண்டை காரணமாக மொசூல் நகரில் இருந்து 900 பேர் தப்பி ஓட்டம்

ஈராக் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்று மொசூல். இந்த நகரம் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் உள்ளது. அவர்களிடம் இருந்து இந்த நகரத்தை மீட்பதற்காக கடந்த திங்கட்கிழமை முதல் அமெரிக்க கூட்டுப்படைகளின் ஆதரவுடன் ஈராக் படைகள் தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளன.

இதன் காரணமாக அந்த நகரத்தில் உக்கிரமான சண்டை மூண்டுள்ளது.

அந்த நகரத்தில் இருந்து சுமார் 900 பொதுமக்கள் தப்பி, சிரியாவுக்குள் நுழைந்து விட்டதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு கூறுகிறது. அப்படி சிரியாவில் நுழைந்தவர்கள், அங்கு அகதிகள் முகாம்களில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

தற்போது மொசூல் நகரில் 15 லட்சம் மக்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதை உறுதி செய்வது முக்கியம் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வலியுறுத்தி உள்ளார்.

இதற்கிடையே மொசூல் நகரில் இருந்து மேலும் பொதுமக்கள் தப்பி ஓட முடியாதபடிக்கு அவர்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தடுப்பதாகவும், அவர்களை மனித கேடயமாக பயன்படுத்த முயல்வதாகவும் கூறப்படுகிறது.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...

மேற்காசிய போர் நெருக்கடியை எதிர்கொள்ளும் வலிமை இந்தியாவுக்கு உண்டு - வானதி சீனிவாசன்

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மேற்காசிய போர் நெருக்கடியை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொள்கிறது என்றும், ம...

கோவை வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் 72 சதவீத வாக்குப் பதிவு; இன்று முடிவுகள் அறிவிப்பு

கோவை வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்தலில் 3,647 வாக்காளர்களில் 2,626 பேர் வாக்களித்தனர். தலைவர், துணைத் தலைவர், செயலாளர...

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...