ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனைக்கு ராகுல் காந்தி நேரில் சென்றார்

தமிழக முதல்வர் ஜெயலலிதா  சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதிலிருந்து காய்ச்சசல், நீர்சத்து குறைவு மற்றும் நோய் தொற்று உள்ளிட்ட பல்வேறு உபாதைகளால் அவர் தொடர் சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவமனை நிர்வாக அறிக்கைகள் வெளியிட்டது. இந்நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய, ராகுல் காந்தி இன்று திடீர் பயணமாக சென்னை வந்துள்ளார். இப்பயணம் முன்கூட்டியே திட்டமிடப்படாத திடீர் பயணமாகவே கருதப்படுகிறது. ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.



சென்னை அப்போலோ மருத்துமனையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை காய்ச்சசல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சிறப்பு விமானம் மூலம் சென்னைக்கு வந்த  முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களை நேரடியாக கேட்டறிந்தார். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் குழு, ராகுல் காந்தியிடம் விளக்கினர். 

சென்னை அப்போலோ மருத்துமனை சென்று ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்த பின், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னனேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதா குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டதாக தெரிவித்தார். விரைவில் அவர் நலம் பெறுவார் என்றும் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதா விரைவில் குணமடைய காங்கிரஸ் சார்பில் வாழ்த்து தெரிவித்து கொள்வதாக கூறினார். அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரும், ராகுல் காந்தியுடன் மருத்துமனைக்கு வந்திருந்தார்.

Newsletter

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...