கோவை : மக்கள் நலக் கூட்டணியினர் தொகுதி பங்கீடு பட்டியலை வெளியிட்டனர்

மக்கள் நலக் கூட்டணியினர் கோவை மாநகராட்சியில் போட்டியிடம் இடங்களுக்கான தொகுதி பங்கீட்டீல் உடன்பாடு எட்டப்பட்டது.

உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி ,கோவை மாநகராட்சியில் மக்கள் நலக் கூட்டணியினர் போட்டியிடும் இடங்களுக்கான தொகுதி பங்கீடு குறித்து 7 கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து மக்கள் நலக் கூட்டணியின் மாவட்ட தலைவர்கள் தொகுதி பங்கீடு பட்டியலை வெளியிட்டனர். இதில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக 30 இடங்களிலும்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்சிஸ்ட் கட்சி சார்பாக 32 இடங்களிலும் , மதிமுக சார்பாக 25இடங்களிலும் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக 13 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முன்னதாக இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட ஒரு சில இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகவும் , மற்று அனைத்து வேட்பாளர்களும் வருகின்ற 3 ஆம் தேதி போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்தார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...